விழுப்புரம்: வளவனுார் அருகே பள்ளத்தில் பைக் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கடலுார் மாவட்டம், வீரசோழகன் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 40; இவர், கடந்த 2ம் தேதி பைக்கில், விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு பகுதியில் இருந்து வில்லியனுார் மார்க்கமாக சென்றார். உப்புமுட்டாம்பாளையம் வளைவில் திரும்பியபோது, நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்தது.இதில், படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE