ஆர்.கே.பேட்டை: ஆத்மலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள், அபிஷேக தரிசனம் செய்தனர்.வங்கனுார், சின்ன குளக்கரையில் உள்ள ஆத்மலிங்கேஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. காலை, 10;00 மணிக்கு, மூலவர் மற்றும் நந்திதேவருக்கு நித்திய பூஜை நடந்தது.மாலை, 4:30 மணிக்கு, நந்திதேவருக்கு, பிரதோஷ அபிஷேகம் செய்யப்பட்டது. பிரதோஷநாதர், உள்புறப்பாடில் எழுந்தருளினார்.அதே போல், வங்கனுார், மலைக்கோவில், அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாணசுந்தரேசனார் கோவில், பொதட்டூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவில், ஆர்.கே.பேட்டை விசாலீஸ்வரர் கோவில்களிலும், சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE