கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அடுத்த, ஏ.என்.குப்பம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. தற்போது, அந்த அணைக்கட்டு நிரம்பி, மூன்றரை அடி உயரத்திற்கு தண்ணீர் பாய்ந்து, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சுற்றுலா தளம் போல் காட்சியளிப்பதால், தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.சில தினங்களுக்கு முன், அந்த அணைக்கட்டில் குளிக்க சென்ற வாலிபர் ஒருவர், ஆற்று வெள்ளத்தில் அடித்து சென்று உயிரிழந்தார்.அதன்பின்னரும், ஆபத்தை உணராமல், ஆற்றில் குளிப்பதும், அணைக்கட்டு தடுப்பில் சாய்ந்தபடி செல்பி எடுப்பதும், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.கவரைப்பேட்டை போலீசார், அணைக்கட்டு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அங்கு வரும் மக்களை எச்சரித்து பாதுகாக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE