சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில்களில், நாளை முதல், பெண்கள், குழந்தைகள் எந்த நேரமும் பயணிக்கலாம்.நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, சென்னை புறநகர் மின்சார ரயில்களில், அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், எந்த நேரமும் பயணித்து வந்தனர்.கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில், அத்தியாவசிய பணியில் இல்லாத பெண்கள், குழந்தைகள் புறநகர் மின்சார ரயிலில் பயணிக்க, நேரக் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில், நாளை முதல், நேரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, அனைத்து பெண்கள், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், எந்நேரமும், புறநகர் மின்சார ரயிலில் பயணிக்கலாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE