முதுகுளத்துார் : முதுகுளத்துார், பேரையூரில் டி.எஸ்.பி., அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன்கட்டி முடித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.
முதுகுளத்துார் டி.எஸ்.பி., கட்டுப்பாட்டில் கீழத்துாவல், பேரையூர், முதுகுளத்துார், இளஞ்செம்பூர், தேரிருவேலி, கடலாடி, கீழச்செல்வனுார் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது.இங்கு டி.எஸ்.பி.,அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் இல்லாததால் 9 வருடங்களாகவே வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால் ஆவணங்களை பாதுகாக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். 2018 டிசம்பரில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.75.61 லட்சம் மதிப்பீட்டில் டி.எஸ்.பி அலுவலகம் மற்றும் வீடு கட்டுவதற்கு பணி நடைபெற்று வந்தது.ஒரு மாதத்திற்கு முன்பு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது.
மேலும் பேரையூர் போலீஸ் ஸ்டேஷனிற்காக 2018 டிசம்பரில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டும் பணி நடைபெற்று வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணி நிறைவு பெற்று கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE