சாலைக்கிராமம் : சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தேங்கும் கழிவுநீரால் பயணிகள்,வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட சாலைக்கிராமத்திற்கு 50 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.இங்கிருந்து சிவகங்கை, காரைக்குடி, பரமக்குடி, தேவகோட் டை, மதுரை, ஆர்.எஸ் மங்கலம் ஊர்களுக்கு பஸ்கள் சென்று வருகின்ற பஸ் ஸ்டாண்ட் முழுவதும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது.சாலைக்கிராமத்தைச் சேர்ந்த கண்ணன்45, கூறுகையில், சாலைக்கிராமம் பகுதியில் பல இடங்களில் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. குப்பையும் தேங்கி கிடப்பதால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சாலைக்கிராமம் ஊராட்சி நிர்வாகத்தினரிடம் தெரிவித்தால் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE