அரும்பாக்கம்: அரும்பாக்கத்தில், மொபைல் பறிப்பில் ஈடுபட்ட இருவரை, பொதுமக்கள் நையப்புடைத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிரிஜா, 22; தனியார் நிறுவன ஊழியர். இவர், வேலை முடிந்து, நேற்று முன்தினம் இரவு, அரும்பாக்கம், பாஞ்சாலி அம்மன் கோவில் அருகே நடந்து சென்றார்.அப்போது, அந்த வழியாக டூ - வீலரில் வந்த மர்ம நபர்கள் இருவர், கிரிஜாவிடம் மொபைல் போன் பறித்து தப்ப முயன்றனர்.சுதாரித்த கிரிஜா, மொபைல் போனை விடாமல், 'திருடன்... திருடன்' என, சத்தம் போட்டு கொள்ளையர்களிடம் போராடினார். சத்தம் கேட்டு, அப்பகுதிமக்கள் இரண்டு வாலிபர்களையும் சுற்றிவளைத்து, நையப்புடைத்து, அரும்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார், இருவரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.இதில், பிடிபட்டவர்கள், ராமாபுரத்தைச் சேர்ந்த தேவ், 20, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கவுதம், 23, என தெரிய வந்தது.இவர்களிடம் இருந்து, மொபைல் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE