திருமங்கலம்: அண்ணாநகரில், வீட்டின் பூட்டை உடைத்து திருடியவரை, போலீசார் கைது செய்தனர்.அண்ணா நகர் மேற்கு, நான்காவது அவென்யுவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர், சபிலால், 55.இவர், அதே அடுக்குமாடி குடியிருப்பில், காவலாளியாக உள்ளார். இவர் தன், மனைவியின் சிறுநீரக சிகிச்சைக்காக, 5 லட்சம் ரூபாயை, சேர்த்து வைத்திருந்தார்.இந்நிலையில், 2ம் தேதி, வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 5 லட்சம் ரூபாய் மற்றும் 1.5 சவரன் நகையை திருடி சென்றனர்.இது குறித்து, திருமங்கலம் போலீசார் விசாரித்தனர். இதில், கொளத்துார், ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்த விக்னேஷ்குமார், 20, என்பவர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.அவரை கைது செய்த போலீசார், 4.70 லட்சம் ரூபாய் மற்றும் 1.5 சவரன் நகையையும் பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE