மாங்காடு: மாங்காடு அருகே, கல்குவாரி குட்டையில் மூழ்கியவரின் உடலை தேடும் பணியில், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.மாங்காட்டை அடுத்த வடக்கு மலையம்பாக்கம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ், 27. இவர், நேற்று முன்தினம் மாலை, நண்பர் சூரியகுமார் என்பவருடன் சேர்ந்து, சிக்கராயபுரம் கல்குவாரி அருகே அமர்ந்து, மது அருந்தியதாகவும், பின், குளிக்க சென்றபோது, தண்ணீரில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.மதுரவாயல் தீயணைப்பு துறையினர் விரைந்து, கல்குவாரியில் மூழ்கிய நாகராஜ் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தேடி வருகின்றனர்.இது குறித்து, மாங்காடு போலீசார் வழக்கு பதிந்து, நாகராஜ் கல்குவாரியில் தவறி விழுந்தாரா அல்லது தள்ளிவிடப்பட்டாரா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE