ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி ராமசாமி முன்னிலை வகித்தார். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச மாத ஓய்வூதியம் ரூ. 7850 வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி தாசில்தார் மூலம் தமிழஅரசுக்கு மனு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE