ராமநாதபுரம் : இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் பணிகளுக்கு இன்று எழுத்து தேர்வு நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 13 மையங்களில் காலை 11:00 மணிக்கு 15,509 பேர் எழுதுகிறார்கள். தேர்வெழுத வருபவர்கள் ஹால்டிக்கெட வைத்திருப்பதோடு, முகக்கவசம் அணிந்து வரவேண்டும். அலைபேசி, கால்குலேட்டர் கொண்டு வர கூடாது. தேர்வு மைய நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்யப்படும். ஒழுங்கீனங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., கார்த்திக் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE