கீழக்கரை : நடிகர் ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு, ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம்தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ரஜினி ரசிகர் மன்ற முன்னாள் மாவட்டச் செயலாளர் பாலநமச்சிவாயன் கூறியதாவது:ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியாக உள்ளனர். குறிப்பாக தி.மு.க., மற்றும் கூட்டணிக்கட்சிகள் போட்டியிடும் ராமநாதபுரத்தில் டெபாசிட் இழக்கச் செய்வதே எங்களின் லட்சியமாக வரையறுக்கப்பட்டுள்ளது, என்றார். ஏர்வாடியில் ஏராளமான ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் மக்களுக்கு லட்டுகளை வழங்கினர். ஏர்வாடி சசேன், நுாருல் அமீன், பரமக்குடி சுமன், பிரியா ராமச்சந்திரன், ராதாகிருஷ்ணன், இந்திரஜித், மகளிர் அணி ரசிகா பானு, வசந்தா, பாத்திமா உட்பட பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வழிவிடும் முருகன்கோயிலில் சிறப்பு அபிேஷகம் செய்து அர்ச்சனை செய்தனர். இனிப்புகள் வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE