கோவை:கோவை, முத்தண்ணன் குளத்துக்கு அருகே பனைமரத்துார் பகுதியில் இருந்த, 20 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.கோவை, முத்தண்ணன் குளத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் துவக்கப்பட்டுள்ளன. கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 2,300 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன. அ.தி.மு.க., - தி.மு.க., - கம்யூ., மற்றும் வள்ளுவர் மன்றமும் இடிக்கப்பட்டது. கோவில்களை இடிக்க, நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு உள்ளது. நிர்வாகிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.இச்சூழலில், பனைமரத்துார் பகுதியில் வசித்த, 20 குடும்பத்தினருக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று வீடு வழங்கப்பட்டது. அவ்வீடுகள், நிர்வாக பொறியாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டது. அடுத்தகட்டமாக, தென்கரையில் உள்ள சில வீடுகள் அகற்ற வேண்டியுள்ளது. பூசாரிபாளையம் ரோட்டில், உணவு தானிய கிடங்கிற்கு அருகில், 200 வீடுகள் இருக்கின்றன. இதில், 90 வீட்டில் வசிப்பவர்கள் மாற்று வீடு பெற்றுள்ளனர். வீட்டை காலி செய்ததும் அகற்றுவதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE