கோவை:இந்திய நிறுவன மதிப்பீட்டாளர் சங்கத்தின், 51வது மாநாடு (ஐவிசி 2020) கோவையில் நடந்தது. நாடு முழுவதும் இருந்து, 160 மதிப்பீட்டாளர்கள் நேரடியாகவும், 140 மதிப்பீட்டாளர்கள் காணொளி வழியாகவும் பங்கேற்றனர்.மாநாட்டின் நோக்கம், அடுத்த கட்ட மேம்பாடு குறித்து நிறுவன மதிப்பீட்டாளர் அமைப்பின் தலைவர் தியாகராஜன், மதிப்பீட்டாளர் நிலைக்குழு உறுப்பினர் பிச்சையா, கோவை கிளையின் தலைவர் அடைக்கலவன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய பொருளாதாரம் வளர்ச்சி கட்டத்தை கடந்து, சந்தை பொருளாதாரத்திற்கு சென்று கொண்டுள்ளது. ஒவ்வொரு பொருளுக்கும், சொத்துக்களுக்கும் உள்ள மதிப்பீடுகளை அறிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக, மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. மதிப்பீட்டாளர்களுக்கும் தர நிர்ணயம் செய்யும் வகையில், ஒருங்கிணைக்கப்பட்டு புதிய மசோதாவை அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.இதற்கான வரைவுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. இந்த சட்டம் வரும்போது, அனைத்தும் முறைப்படுத்தப்பட்டு, மதிப்பீடும் ஒரு தொழிலாக உருவாகும்.இது சர்வதேச அளவில், இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதாக இருக்கும். மதிப்பீடு தொடர்பான கல்வி, அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். தனி நிறுவனமும் துவக்கப்படும். இதனால், மதிப்பீட்டு தொழில் புதிய மதிப்பினை பெறும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE