திருப்புத்துார் : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் சிவகங்கை ரஜினி மக்கள்மன்றம் சார்பில் வழிபாடு நடந்தது.
மக்களுக்கு இனிப்பு, பொங்கல் வழங்கப்பட்டது.மாவட்ட செயலாளர் ராமேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி முன்னிலை வகித்தார். நகர நிர்வாகி திருமுருகன், ஒன்றிய நிர்வாகி கோபி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.காரைக்குடியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.,ராமசாமி தலைமையில் கோட்டையூர் அன்னபூரணி முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ராமேஸ்வரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயசங்கர், கண்ணன், நகர் செயற்குழு உறுப்பினர் செந்தில் நாதன், நளன், பள்ளத்துார் சரவணன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE