சிவகங்கை : சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களில் நேற்று நடந்த 'லோக் அதாலத்தில்'103 வழக்குகள் மூலம் 2 கோடியே 46 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம், பிற நீதிமன்றங்களில் நேற்று 'லோக் அதாலத்' மூலம் வழக்குகளில் தீர்வு காணும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ரபி தலைமை வகித்தார். நீதிபதிகள் கருணாநிதி, பாபுலால், மோகனா, இனியா கருணாகரன், மாஜிஸ்திரேட் பாரதி ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.இதில், 118 குற்றவியல், 38 காசோலை மோசடி, 95 வங்கி கடன், 84 மோட்டார் வாகன விபத்து, 13 குடும்ப பிரச்னை என 486 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.
ஒட்டு மொத்தமாக 103 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு 2 கோடியே 46 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE