கோவை:கோவை, கவுண்டம்பாளையம் உரக்கிடங்கு வளாகத்துக்குள் எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டை மாற்றுவதற்கு, அடிப்படை வசதி செய்து கொடுக்க, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.கமிஷனர் குமாரவேல் பாண்டியன், நேற்று மார்க்கெட் பகுதியை ஆய்வு செய்தார். பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்குள் தற்காலிகமாக, வெங்காயம் மற்றும் தக்காளி வியாபாரம் செய்து வருவதை பார்த்தார். தக்காளி வியாபாரம் மட்டும் செய்ய வேண்டும். வெங்காய வியாபாரிகள் மீண்டும் மார்க்கெட் வளாகத்துக்குள் மட்டுமே, வியாபாரம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார்.உரக்கிடங்கு வளாகத்தில், ரோடு, மின்சாரம், குடிநீர், கழிப்பறை வசதி செய்து தரப்படும். வியாபாரிகள், தங்களுக்கான கடைகளை, அவர்களே சொந்த செலவில் அமைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான பணிகளை உடனடியாக துவக்க, பொறியியல் பிரிவினருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE