பேரையூர் : சேடபட்டி பகுதியில் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. தொடர்மழையால் அடித்தாள் அழுகல் நோய் ஏற்பட்டுள்ளது.
ஆய்வு செய்த தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரதீபா கூறியதாவது: இந்நோய் பாதித்த செடிகளை பிடிங்கி காய வைத்து எரிக்க வேண்டும். இந்நோய் பரவாமல் பாதுகாக்க ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் கார்பென்டசிம் பூஞ்சாண கொல்லியுடன் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும். மண்ணில் தாமிர சத்து குறையும் போது இந்நோயின் தாக்கம் அதிகரிக்கும். இதற்கு தாமிர ஆக்ஸிகுளோரைடு 0.25 சதவீதம் கலந்து மண்ணின் மீது தெளித்து இந்நோயிலிருந்து வெங்காய பயிரை பாதுகாக்கலாம் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE