அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகர ரஜினி மக்கள் மன்றம் சார்பில், அவரது பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவையொட்டி, காலேஜ் ரோடு, ஸ்ரீ ஐயப்பன் கோவில், கொங்கணகிரி கந்த பெருமான் கோவில், ஸ்ரீராகவேந்திரர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.வீரபாண்டி, லட்சுமி தியேட்டர் ஈரோடு, மாஸ்கோ நகர், கூலிபாளையம், கொங்கு மெயின் ரோடு, உள்ளிட்ட பகுதியில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெரியபாளையத்திலுள்ள கருணை இல்ல குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.மாவட்டச் செயலாளர் மேகநாதன், மாநகர இணை செயலாளர்கள் சதீஷ்குமார், ரமேஷ், துணை செயலாளர்கள் தங்கவேல், சோமசுந்தரம், செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், முத்துக்குமார், குமார், இளைஞர் அணி செயலாளர் சதீஷ்குமார், தொழில்நுட்ப அணி செயலாளர் அருணகிரி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE