மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம், சிறுமுகை அடுத்த முடுதுறை பாசக்குட்டை அருகே, பட்டாசு தயாரிக்கும் சிறிய ஆலை உள்ளது. இரும்பறையைச் சேர்ந்த நஞ்சப்பன் என்பவர், தனது விவசாய நிலத்தில், சிறிய ஷெட் அமைத்து, அதில் கோவில் விழாக்களில் வெடிக்கும், பட்டாசுகளை தயாரித்து வருகிறார்.நேற்று மதியம் இவரது மனைவி சுமதி, 40, பாசக்குட்டையை சேர்ந்த மகேஸ்வரி, 34 ஆகிய இருவரும், பட்டாசு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏற்பட்ட வெடி விபத்தில், இரு பெண்களும் காயமடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE