திருப்பூர்:அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளிகள் உள்ளிட்டோருக்கு, கடந்த ஜூலை முதல் நவம்பர் வரையிலான ஐந்து மாதங்களுக்கான கொண்டைக்கடலை, தற்போது, ஐந்து கிலோ வழங்கப்பட்டு வருகிறது.வழங்கல் துறையினர் கூறுகையில், 'அனைத்து ரேஷன் கடைகளிலும் கொண்டைக்கடலை வழங்கப்படுகிறது. இதுவரை, 40 முதல், 50 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது.இம்மாத இறுதிக்குள் அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு விடும். கொண்டைக்கடலை வேண்டாம் என்போருக்கு, ஒரு கிலோ துவரம்பருப்பு இலவசமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE