அன்னுார்:கோவை அருகே பெண் போலீஸ் ஏட்டு வீட்டில், பட்டப்பகலில் பூட்டை உடைத்து, 22 சவரன் நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம், கோவில்பாளையம், வெங்கடேசா நகரில் ராஜேஷ், 45, குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் லேத் ஒர்க்ஷாப் நடத்துகிறார். இவருடைய மனைவி பத்மா, 40, கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.
பத்மா குழந்தைகளுடன் ஊருக்கு சென்றுள்ளார்.நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு ராஜேஷ், ஒர்க்ஷாப்புக்கு சென்று விட்டார். மாலையில் வந்து பார்த்தபோது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோ உடைக்கப்பட்டு, 22 சவரன் நகைகள், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தன. சம்பவ இடத்தில், டி.எஸ்.பி., சுந்தரராஜன் விசாரித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE