அவிநாசி:சேவூர் - புளியம்பட்டி ரோட்டில் விடுபட்ட பகுதியை விரிவுபடுத்தும் பணி துவங்கியுள்ளது.அவிநாசியில் இருந்து, சேவூர் வழியாக புளியம்பட்டிக்கு தினசரி நுாற்றுக்கணக்கில் வாகனங்கள் சென்று வருகின்றன. அவிநாசி உட்கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில், ஏற்கனவே, சேவூர் முதல் தண்டுக்காரன்பாளையம் வரை ரோடு விரிவாக்கம் செய்யும் பணி நடந்தது.இந்தாண்டு, விடுபட்ட பகுதிகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. அதன்படி, தண்டுக்காரன்பாளையம் துவங்கி, ஆலத்துார் மேடு வரையுள்ள ரோடு விரிவுபடுத்தும் பணி துவங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் வரும் வாகனங்கள் செல்ல தற்காலிக மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டு, திருப்பி விடப்பட்டுள்ளது.நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், ''ஒருங்கிணந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரோடு விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. இதுவரை, 7 மீ., அகலத்தில், இரு வழிச்சாலையாக இருந்த இப்பகுதி, 10.50 மீ., அகலத்துக்கு, மூன்று வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட உள்ளது. பணி முடியும் வரை, மாற்று பாதையில் வாகன ஓட்டிகள் கவனமுடன் பயணிக்க வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE