கோவை:கோவையில், நேற்று ஒரே நாளில், 104 பேர் கொரோனா குணமடைந்து வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் நேற்று புதிதாக, 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு, 50 ஆயிரத்து 317 ஆக உயர்ந்தது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 30 வயது ஆண் நேற்று உயிரிழந்தார். மொத்த பலி எண்ணிக்கை, 629 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த, 104 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 48 ஆயிரத்து 696 பேர் குணமடைந்து உள்ளனர். 992 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE