திருப்பூர்,:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தும், நடவடிக்கை இல்லையென, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.தாராபுரம் தொகுதி, பொன்னிவாடி ஊராட்சிக்குட்பட்ட, 220வது பாகத்துக்கு உட்பட்டது எலுகாம்வலசு. அக்கிராம மக்கள், வாக்காளர் பட்டியலில் திருத்தம், பெயர் நீக்கம் மற்றும் பெயர் சேர்ப்புக்கு, உரிய முறையில் விண்ணப்பித்துள்ளனர்.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கடந்த முறை, 220வது பாகத்தில், 11 பேர், பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தும், பெயர் சேர்க்கப்படவில்லை. இதேபோல், பெயர்நீக்கம், முகவரி திருத்தம் போன்ற படிவங்கள் மீது சரியான நடவடிக்கையில்லை. தவறுதலாக பதிவாகிய, சம்பந்தமில்லாத வேறு நபரின் போட்டோவை மாற்றக்கோரி விண்ணப்பித்தும் நடவடிக்கையில்லை. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுத்தும், தாலுகா அலுவலகத்தில், விண்ணப்பம் முறையாக பரிசீலிக்கப்படுவதில்லை,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE