கோவை:பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்தை மர்மநபர்கள் கிழித்த சம்பவத்தால், கோவையில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ், 80 அடி ரோட்டில் மாகாளியம்மன் கோவிலின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க தேவரின் உருவப்படம் கிழிக்கப்பட்டிருப்பதை நேற்று அவ்வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்த அகில பாரத இந்து மகா சபா கொங்கு மண்டல இளைஞரணி, தமிழ்நாடு முக்குலத்தோர் இளைஞர் பேரவையை சேர்ந்த, 50 க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் - திருச்சி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் போலீசார் பேச்சு நடத்தினர்.கோவை மாவட்ட முக்குலத்தோர் புலிப்படை சார்பிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE