கோவை:கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் காட்டு யானை தாக்கி, இருவர் இறந்தனர்.
கோவை வனச்சரகம், தொண்டாமுத்தூர், வஞ்சியம்மன் கோவில் வீதி பகுதியில், நேற்று காலை, 6:00 மணிக்கு, திடீரென ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. ஆறுமுகம், 75 என்பவர், டீ கடைக்கு செல்வதற்காக, வீட்டை வெளியே வந்துள்ளார். அவரை யானை தும்பிக்கையால் துாக்கி வீசியது. இதில், ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த வனத்துறையினர், காட்டு யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். முத்திபாளையம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி நுழைவாயில் கேட் மற்றும் சுற்றுச்சுவரை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை, அருகிலிருந்த பள்ளத்திற்குள் சென்றது. வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டினர்.
* நீலகிரி மாவட்டம், சேரம்பாடி அருகே கண்ணம்வயல் பகுதியில் சேர்ந்தவர் நாகமுத்து,65. நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே நடந்து சென்ற நாகமுத்துவை, யானை தாக்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். நேற்று பிரேத பரிசோதனைக்கு பின், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.ஊர்மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு, 'யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் உடனடியாக விரட்ட வேண்டும்' என வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE