கூடலுார்:கூடலுார் போக்குவரத்து துறை சோதனை சாவடியில், லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனை செய்து, கணக்கில் வராத, 34 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்தனர்.நீலகிர் மாவட்டம், கூடலுார் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை, தொரப்பள்ளி பகுதியில், போக்குவரத்து துறை சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு, நீலகிரி லஞ்ச ஒழிப்பு துறை, டி.எஸ்.பி., சுகாசினி உத்தரவுபடி, இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி தலைமையில் போலீசார், நேற்று, காலை, 6:00 மணி முதல், 9:30 மணி வரை சோதனை செய்தனர்.சோதனையில், கணக்கில் வராமல் வைத்திருந்த, 34 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ சுலோசனா, அலுவலக ஊழியர் சிபி ஜேக்கப் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். மேலும், அங்கிருந்து சில ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE