பொங்கலுார்:தக்காளி விலை வீழ்ச்சியால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.புரட்டாசி பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி, தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. தற்போது மழை பெய்வதால், பெருமளவு தக்காளி, அழுகி வீணாகியுள்ளது.விவசாயிகள் கூறியதாவது:தக்காளி நடவு செய்த இரண்டு மாதம் வரை மழையில்லாமல் வறண்ட வானிலை நிலவியது. இதனால், நல்ல விளைச்சல் கிடைத்தது. தற்போது மழை பெய்து வருவதால், தேவையை விட, உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரு டிப்பர் தக்காளி, 80 ரூபாய்க்கு விலை போகிறது. இந்த தொகை, பறிப்பு கூலி மற்றும் வேன் வாடகைக்கு சரியாக இருப்பதால், பல விவசாயிகள் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE