வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே வீடுகள் நிறைந்த பகுதிக்குள் புகுந்த, கடுமையான விஷம் கொண்ட, கண்ணாடி விரியன் பாம்பை, தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டுப்பகுதியில் விடுவித்தனர்.வெள்ளகோவில், ராஜீவ் நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது வீட்டின் பின் உள்ள காலியிடத்தில், சிமென்ட் 'சீட்' வைக்கப்பட்டிருந்தது.அதற்குள், கொடிய விஷமுள்ள, 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு இருந்தது. இது குறித்து, அப்பகுதியினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.அதன்பேரில், நிலைய அலுவலர் வேலுசாமி மற்றும் கோபால் ஆகியோர் பாம்பை லாவகமாக பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE