ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் பனிப்பொழிவு துவங்கி உள்ளதால், பெரும்பாலான பகுதிகளில், பனி படர்ந்துள்ளது. கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவால், தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு
உள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல், பனிப்
பொழிவு துவங்கியது. இதனால் நேற்று, ஸ்ரீநகரில், 5.1 செ.மீ., முதல், 7.6 செ.மீ., வரையும்;
காஷ்மீர் பள்ளத்தாக்கில், 1 - 2 அடி வரையும், பனி படர்ந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே, தொடர் கன மழைகாரணமாக, ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பாதுகாப்பு நலனை கருத்தில் வைத்து, அந்தச் சாலை நேற்று மூடப்பட்டது.

காஷ்மீர் பள்ளத்தாக்குடன் நாட்டின் பிற பகுதிகளை இணைக்கும் சாலைகளும் மூடப்பட்டன.
இதற்கிடையே, சாலையில் படர்ந்த பனியை அப்புறப்படுத்தும் பணிகளில், ஊழியர்கள் ஈடுபட்டு
உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE