ஆத்தூர்: ஆத்தூர், முதலாவது வார்டு, கோட்டை பெருமாள் கோவில் தெருவில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதில், 30 வீடுகளுக்கு, இணைப்பு உள்ளபோதும் பல மாதங்களாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால், நேற்று காலை, 11:30 மணிக்கு, அப்பகுதி மக்கள், காலி குடங்களுடன், ராணிப்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, 'சீரான குடிநீர் கேட்டு புகாரளித்தும் கண்டுகொள்ளவில்லை. வராத தண்ணீருக்கு, கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது' என, மக்கள் கூறினர். 'சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, நகராட்சி அலுவலர்கள் உறுதியளித்ததால், மக்கள் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE