கெங்கவல்லி: வலசக்கல்பட்டி ஏரியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரம் ஊராட்சி, வலசக்கல்பட்டி ஏரி, 102 ஏக்கரில் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால், அந்த ஏரி நிரம்பி, தடுப்பணை வழியாக, உபரிநீர் செல்கிறது. 2018ல், அங்கு குளித்த, 5 பேர் உயிரிழந்தனர். இதனால், பொதுப்பணி, வருவாய்த்துறை, போலீசார், ஏரி தடுப்பணை உள்ளிட்ட இடங்களில் குளிக்க தடை விதித்தனர். ஆனால், இதை மீறி, சிலர் குளித்ததால், ஏரி இருபுறமும், 'வலசக்கல்பட்டி ஏரியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது' என, போலீசார், எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். காலை, மாலையில், கெங்கவல்லி போலீசார், பொதுப்பணித்துறையினர், கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE