வீரபாண்டி: உடைந்த தரைப்பாலத்தில், ஆபத்தை தவிர்க்க, மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகே, இனாம் பைரோஜி - நாமக்கல் மாவட்டம், மின்னக்கல் இடையே திருமணிமுத்தாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. அதன் நடுவே இருந்த தடுப்புகள், வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டு, பாலத்தின் ஒரு பகுதியில் உடைப்பால், பள்ளம் ஏற்பட்டிருந்தது. தமிழகத்தில் பெய்து வரும் மழையால், தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், அந்த தரைப்பாலத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடைப்பு ஏற்பட்ட பள்ளத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, தற்காலிகமாக விபத்து ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE