சேலம்: தமிழகத்தில், நடிகர் ரஜினிகாந்தின், 70வது பிறந்தநாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. சேலத்தில், பள்ளப்பட்டி, மாவட்ட அலுவலகம் முன், ரசிகர் மன்றத்தினர், பட்டாசு வெடித்தனர். ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர் செந்தில்குமார், 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில், கொரோனா காலத்தில், சிறப்பாக பணிபுரிந்த ஊழியர், 400 பேருக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். பின், நினைவுப்பரிசு வழங்கப்பட்டன. இதுகுறித்து, செந்தில்குமார் கூறியதாவது: ரஜினிகாந்த் பிறந்தாள் எங்களுக்கு கொண்டாட்ட திருநாள். வரும் சட்டசபை தேர்தலில், எப்படியாவது ரஜினியை முதல்வர் ஆக்குவது எங்களின் தலையாய கடமை. அவரால் மட்டுமே, தமிழகத்தை தலைநிமிர செய்ய முடியும்; இம்மாதம் முழுதும், ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்படும். ராகவேந்திரா கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, நாளை (இன்று) மகுடஞ்சாவடி, வீரபாண்டி ஒன்றியங்களில் விழா நடப்பதுபோல், அனைத்து ஒன்றியங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் புயல்பாபு தலைமையில், 15 பேர், ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE