ஈரோடு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம், ஈரோட்டில் நடந்தது. ஈரோடு மாவட்ட தலைவர் ராக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜயமனோகரன், வட்ட கிளை தலைவர் கார்த்திகேயன், மாநில தலைவர் அன்பரசு, மாநில செயலாளர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வேலை நியமன தடை சட்டத்தை திரும்ப பெற்று, அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டங்களால் பாதிக்கப்பட்ட, 5.069 பேரின் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட் சோர்சிங், சிறப்பு காலமுறை ஊதிய முறைகளை ரத்து செய்து, காலமுறை ஊதியத்தில் புதிய நியமனங்களை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE