பென்னாகரம்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மாலை, நீர்வரத்து வினாடிக்கு, 7,000 கன அடியாக சரிந்தது. கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், மழை குறைந்ததால், அங்குள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, காவிரியில் திறக்கப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சரிந்து காணப்படுகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, வினாடிக்கு, 8,000 கன அடியாக வந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 7,000 கன அடியாக சரிந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE