தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நடந்த, தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 194 வழக்குகளுக்கு, 2 கோடியே, 47 லட்சத்து, 68 ஆயிரத்து, 326 ரூபாய்க்கு சமரச தீர்வு காணப்பட்டது. தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றம் உட்பட, மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்ட அமர்வு நீதிபதி(பொ) ஜீவானந்தம், மோட்டார் வாகன விபத்து நீதிபதி சீத்தாராமன் தலைமை வகித்தனர். இதில் மொத்தம், 1,507 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில், 194 வழக்குகளுக்கு, 2 கோடியே, 47 லட்சத்து, 68 ஆயிரத்து, 326 ரூபாய்க்கு சமரச தீர்வு காணப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE