அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பெரியார் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதேவி, 30; இவர், நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு, வீட்டை பூட்டி விட்டு, கோவிலுக்கு சென்றுள்ளார். பின், திரு.வி.க., நகரிலுள்ள தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டு மதியம், 3:30 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த, நான்கு பவுன் வளையல், செயின், ஜிமிக்கி உள்பட மொத்தம், ஏழேகால் பவுன் நகை திருடு போனது தெரிந்தது. இது குறித்து ஸ்ரீதேவி அளித்த புகார்படி, அரூர் போலீசார் வழக்குப்பதிந்து, நகைகளை திருடிச்சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE