கிருஷ்ணகிரி: தொடக்கக்கல்வி பட்டய தேர்வெழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், தனித்தேர்வர்கள் மறு கூட்டல் மற்றும் ஒளி நகல் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: செப்., 2020ல் நடந்த தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு வந்த ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள், கடந்த, 7 அன்று பிற்பகல் அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வெளியிடப்பட்டது. இதில், தேர்வெழுதிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள், தேர்வெழுதிய பாடங்களுக்குரிய விடைத்தாள்களை, மறுகூட்டல் செய்யவும் மற்றும் ஒளிநகல் பெறுவதற்கும், வரும், 14 முதல், 17 வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE