போளூர்: போளூர் அருகே, பழுதாகி நின்றிருந்த லாரி மீது, மற்றொரு லாரி மோதியதில், வாழப்பாடியை சேர்ந்த டிரைவர் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து, சேலம் நோக்கி, நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று சென்றது. அதை, சேலம் மாவட்டம், வாழப்பாடியை சேர்ந்த டிரைவர் மாயக்கண்ணன், 26, ஓட்டினார். லாரி, கலசப்பாக்கம் அடுத்த எர்ணாமங்கலம் அருகே, இரவு, 8:00 மணிக்கு சென்றபோது, சாலையோரத்தில் பழுதாகி நின்றிருந்த மற்றொரு லாரி மீது மோதியது. இதில், இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் மாயக்கண்ணன், படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து, கலசப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE