நாமக்கல்: தர்மபுரி மாவட்டம், மாரண்ட ஹள்ளியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரனை, போலீசார் கைது செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர், மாநிலம் முழுவதும், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். நாமக்கல்லில், ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில், சாலை மறியல் போராட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஈஸ்வரனை கைது செய்ததை கண்டித்து, கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், பூபதி, பழனிவேல், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் என, எட்டு பெண்கள் உட்பட, 90 பேரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE