நாமக்கல்: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் மணிக்கூண்டு அருகே, ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் அரங்கண்ணல் தலைமை வகித்தார். பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. முன்னதாக, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கொல்லிமலை வாழவந்தி நாடு அரசு தாலுகா மருத்துவமனைக்கு, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE