ப.வேலூர்: பரமத்தி வட்ட சட்டப்பணிகள் ஆணை குழு மற்றும் இந்தியன் வங்கி சார்பில், லோக் அதாலத் நடந்தது. பரமத்தி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதி மன்ற நீதிபதியுமான அசின்பானு தலைமை வகித்தார். ப.வேலூர் வட்டாரத்தில் உள்ள, ஏழு இந்தியன் வங்கி கிளைகளில் இருந்து, 33 வழக்குகளில், 61 லட்சம் ரூபாய்க்கு வாராக்கடன்கள் தீர்வு காணப்பட்டன. ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகநாதன், சமூக ஆர்வலர் சுவாமியப்பன், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் மற்றும் இந்தியன் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE