நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. அதிகாலையில் குளிராக இருப்பதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில், நேற்று, அதிகாலை முதல், நாமக்கல், மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில், கடுமையான பனிப்பொழிவு நீடித்தது. அதனால், அருகே செல்பவர்கள் கூட தெரியாத அளவுக்கு புகைமூட்டமாக காட்சியளித்தது. இந்த பனிமூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். வேறுவழியின்றி, காலை, 7:00 மணிக்கும், தங்களது வாகனங்களில், முகப்பு விளக்கை எரியவிட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், அதிகாலையில், வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் என, அனைவரும், குல்லா, ஸ்வெட்டர் அணிந்து சென்றனர். காலை, 7:30 மணிக்கு, சூரியன் எட்டிப்பார்த்ததும், பனிமூட்டம் விலகியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE