கிருஷ்ணராயபுரம்: பிள்ளபாளையத்தில், முட்செடிகளை அகற்றி, தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் முதல், லாலாப்பேட்டை கிளை வாய்க்கால் வரை, சாலையின் இருபுறமும் புதர்கள் மண்டியிருந்தன. விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்து, இரவு நேரத்தில் நடந்து வரும் மக்கள் அச்சப்பட்டனர். இந்நிலையில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் மூலம் சாலையில் வளர்ந்த புதர்கள், முட்செடிகள் முழுமையாக வெட்டி அகற்றி தூய்மைப் பணி நடந்தது. அப்பணிகளை, பி.டி.ஓ., வெங்கடாசலம் பார்வையிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE