கரூர்: கரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், செயலாளர் பகவான் பரமேஸ்வரன் தலைமையில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நடிகர் ரஜினிகாந்தின், பிறந்த நாள் விழாவை, நேற்று மாநிலம் முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாடினர். கரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், கல்யாண பசுதீஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. அதில், ரஜினிகாந்த் பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. பிறகு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் ரவி உள்ளிட்ட, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE