கரூர்: கரூர், நாரத கான சபாவில் வயலின் இசை நிகழ்ச்சி நடந்தது. நாரதகான சபா தலைவர் சூரிய நாராயணன் தொடங்கி வைத்தார். கொரோனா பொது முடக்க காலத்தில் அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளியுடன் இசை நிகழ்ச்சி நடந்தது. ஆண்டாங்கோவில் குருமூர்த்தி வயலின், திருச்சி சுவாமிநாதன் மிருதங்கம், விக்னேஷ் கடம் ஆகியோர் பக்க வாத்தியங்களை இசைத்தனர். நாரதகான சபா துணை தலைவர் பொறியாளர் ராமநாதன், செயலாளர் சேதுராமன், இணை செயலாளர் மகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE