கரூர்: வரும், 16ல் கரூருக்கு முதல்வர் பழனிசாமி வருகை தரவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார்.
போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வர், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கவுள்ளார். பின்னர், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். தொடர்ந்து, வளர்ச்சித்திட்டப்பணிகள், கொரோனா நோய் தடுப்பு குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தவுள்ளார். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் சுயஉதவிக்குழுவினருடன் கலந்தாய்வு கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். இதில், அனைத்து துறை அலுவலர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் கொரேனா தொற்று பரிசோதனை செய்த பின்னே, அனுமதிக்கப்படுவர். விழா மேடை மற்றும் ஆய்வுக்கூட்ட அரங்கம் முழுவதுமாக கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். சமூக விலகலை கடைப்பிடித்து இருக்கைகள் அமைத்திட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், சப்- கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE