கரூர்: கைவிடப்பட்ட தனியார் கிணறுகள் மூடப்படாததால், குப்பை கொட்டும் இடமாக மாறிவருகிறது.
கரூர் நகராட்சியை ஒட்டி, பல பகுதிகளில் விவசாயம் நடந்து வந்தது. அங்கு, கிணறுகள் மூலம் பாசனம் செய்து வந்தனர். தற்போது, நகரமயமாதல் காரணமாக வயல்கள் பெரும்பாலும், மனைகளாக விற்கப்பட்டுள்ளன. இங்கு, ஏராளமான குடியிருப்புகள் பெருகி வருகின்றன. இப்பகுதியில், கைவிடப்பட்ட தனியார் கிணறுகள் பல உள்ளன. பாதுகாப்பற்ற முறையில் அவை உள்ளன. கிணற்றை மூடாததால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். சிறுவர்கள் விளையாடும் போது தவறிவிழும் அபாயம் இருக்கிறது. சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நீண்டகாலமாக கிணறுகள் திறந்தநிலையிலேயே காணப்படுகின்றன. இதில், குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. உள்ளாட்சி நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE